#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 19) 4,979 பேருக்கு கொரோனா; 78 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 4,979 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில சுகாதாரத் துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,979 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தொற்று இருப்பவர்கள் உறுதி செய்யப்பட்டவர்கள் 4,902 பேர்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 77.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,70,693 ஆக உயர்ந்துள்ளது.

இதில், சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் ஒரேநாளில் 78 பேர் (அரசு மருத்துவமனை – 55, தனியார் மருத்துவமனை -23) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலி எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 4,059 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 1,17,915 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 50,294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 52,993 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இது ஒருநாளில் அதிகபட்ச பரிசோதனை ஆகும். இதுவரை மொத்தம் 19,32,492 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 55, தனியார் ஆய்வகங்கள் 54 என மொத்தம் 109 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே