ஆக்சிஜன் பற்றாக்குறை போக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு பராமரிப்பு மையங்களில் 4300 படுக்கைகள் உள்ளதாகவும், இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆக்சிஜன் படுக்கைகள் ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கம் பரிசோதனை மையங்களில் உள்ளதாகவும்; ஆக்சிஜனை பொறுத்தவரை ஒரு வார காலமாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தான் உள்ளதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே