ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ ஆர்.காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு உறுதியானதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்எல்ஏ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
முன்னதாக இன்று திமுக எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், கார்த்திகேயன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யட்டிருந்தது.
இதையடுத்து தமிழகத்தில் இதுவரை 16 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.