#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 14) 4,526 பேருக்கு கொரோனா..! 67 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,526 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் மற்றும் குணமடைந்தோர் உள்ளிட்ட எண்ணிக்கைகள் அடங்கிய தரவுகள் மாநில சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,526 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,078 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 67 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே