#BREAKING : ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,093 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அங்கு புதிதாக 10,093 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,20,390 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் கிழக்கு கோதாவரியில் 1,676 பேருக்கும், அனந்தபூரில் 1,371 பேருக்கும், குண்டூரில் 1,124 பேருக்கும், கர்னூலில் 1091 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய தேதியில் அங்கு 63,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே