கொரோனாவில் இருந்து குணமான 98 வயது முன்னாள் ராணுவ வீரர்

கரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயதான ஓய்வுபெற்ற போர் வீரர் ராமு லக்ஷ்மன் சக்பால் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

மும்பை நெருல் பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற போர்வீரர் சிப்பாய் ராமு லக்ஷ்மன் சக்பால் (வயது 98).

இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கப்பல் அஸ்வினி கடற்படை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் கரோனா தொற்றை வென்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என இந்திய கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கரோனாவில் இருந்து மீண்ட சக்பாலை கப்பல் அஸ்வினி கடற்படை மருத்துவமனையின் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக கடற்படை வெளியிட்ட அறிக்கை: “மஹாராஷ்டிரா மாநிலம் நெருல் பகுதியில் வசித்தவர் ராமு லஷ்மண் சக்பல். கடற்படை முன்னாள் வீரர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆபத்தான நிலையில், கடற்படை ஐஎன்எச்எஸ் அஸ்வினி கப்பலில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா காரணமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அளித்த சிகிச்சையால், அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது, ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிராக ராணுவ மருத்துவமனைகளும் தங்கள் பணிகளை செய்து வருகின்றது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே