விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்று சீசன் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த 3 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மூலம் பலரும் மக்களிடையே பிரபலமாகினர். அதில் சிலருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.
தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்கப்படவுள்ளது. இதற்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
இது தொடர்பான புரமோஷன் வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்த முறை விஜய் டிவி புகழ் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி, பாடகர் வேல்முருகன், ஜித்தன் ரமேஷ், ஆஜித், நாசரின் மகன் அபி ஹாசன், நடிகை ரேகா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதாவது, தற்போது கொரோனா பரவல் காணப்படுவதால் அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுவார்கள்.
அதில், அவர்களுக்கு கொரொனா தொற்று இல்லை என்றால் மட்டுமே அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 3ம் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்த முறை 12 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கின்றனர் எனவும், 100 நாட்கள் என்கிற விதிமுறை மாற்றப்பட்டு 80 நாட்களாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.