2 வயதிலேயே கணவரை சந்தித்த பிக் பாஸ் ஆர்த்தி! வைரலாகும் புகைப்படம்.

நடிகை ஆர்த்தி மிக சிறிய வயதிலேயே கணவர் கணேஷை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
திரைப்படங்கள், டிவி ரியாலிட்டி ஷோக்கள் உட்பட பலவற்றிலும் காமெடி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. அவரது பல காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன. பொல்லாதவன், குட்டி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி காமெடி நடிகர்களுடனும் அவர் இணைந்து நடித்துள்ளார்.
ஆர்த்தி கடந்த 2009இல் காமெடி நடிகர் கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் கணேஷ் இருவரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளன.ர் ஒரு சில திரைப்படங்களிலும் அவர்களை ஒன்றாக பார்த்திருப்போம்.

இந்நிலையில் ஆர்த்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் தான் 2 வயது இருக்கும் போது கணேஷை பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்த்தி 2 வயது இருக்கும் போது நடித்த ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை தான் அவர் பதிவிட்டுள்ளார். அதே படத்தில் கணேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அவர்களுடன் நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார்.

“இது பேபி ஆர்த்தி மற்றும் மாஸ்டர் கணேஷ் இணைந்து நடித்த முதல் படம். கடவுள் தான் எனக்கு இரண்டு வயது இருக்கும் போது என் கணவரை சந்திக்க வைத்துள்ளார். கிரேட் ஸ்ரீவித்யா அம்மா உடன் நினைவுகள்” என ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்த்தி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்றுள்ளார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் அவர்களுடன் பங்கேற்று இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதன் பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தாலும் அவர் 21 நாட்கள் மட்டுமே நிகழ்ச்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சீசனில் ஓவியா மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

மேலும் தற்போது கொரோனா லாக் டவுன் நேரம் என்பதால் ஆர்த்தி தன்னுடைய வீட்டில் தான் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் ஆக்டிவாக பல விஷயங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவை அதிகம் காமெடியாகவும் சில நேரம் இருக்கும். இந்த முழு ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் சினிமாத்துறை அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ளது. அதனால் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கேட்டு வருகின்றனர். அதை ஏற்று ஆர்த்தி தான் ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கவும் தயார் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நான் நடக்கும் பட்சத்தில் தனக்கு தரவேண்டிய சம்பளத்தை வேறு நடிகர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து சம்பளமாக கொடுங்கள் என ஆர்த்தி கூறியிருந்தார். ஆர்த்தி இப்படி அறிவிப்பை வெளியிட்டதற்கு சினிமா துறையில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே