#BREAKING : தமிழகத்தில் நாளை முதல் ஏப்.30 வரை வங்கி சேவை நேரம் குறைப்பு..!!

கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் வங்கிகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில பார்வையாளர்கள் குழுமம் நேரத்தை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது என மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ,கர்ப்பிணிகள், பார்வை குறைபாடு, மாற்றுத்திறன் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே