அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்; பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை – சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி தகவல்!

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து, தங்களுக்கு மின்னஞ்சல் ஏதும் வரவில்லை என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

செமஸ்டரில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து AICTE மின்னஞ்சல் அனுப்பியதாக அண்ணா பல்கலை., துணைவேந்தர் சுரப்பா தெரிவித்தார்.

ஆனால் அதுபோன்ற மின்னஞ்சல் ஏதும் அனுப்பப்படவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்தார்.

இதனிடையே அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவது தொடர்பாக கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை என்றும், அரசு அறிவித்த படி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் என்றும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே