மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு, 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன..!!

தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்படுவதாக தொடர்ந்து பல புகார்கள் எழுந்த நிலையில், இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று ஒரு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தன.

அதில் 2 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தடைந்தன என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திற்கு இதுவரை 67,85,130 லட்சம் தடுப்பு ஊசிகள் வந்துள்ள நிலையில் 52,06,836 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தடுப்பூசி கொண்டு செல்லப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே