ஒரே நாளில் 714 பேர் மரணம்: அதிகரிக்கும் கரோனா தொற்று பலி எண்ணிக்கை

நாடு முழுவதும் புதிதாக 89,129 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 714 பேர் பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அதன்படி நேற்று ஒரே நாளில் 89,129 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,23,92,260 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்தளவு அதிக எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 44,202 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,15,69,241 ஆக உள்ளது.

ஒரே நாளில் 714 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். மொத்த பாதிப்பு 1,64,110 ஆக உள்ளது.
நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,58,909 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி நாட்டில் கரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 7,30,54,295 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே