இந்தியாவில் உணவு டெலிவரி சேவையை தொடங்கிய அமேசான் நிறுவனம்

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமாக அமேசான் இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவேரி சேவையை விரைவில் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு வணிக வளாகம் மற்றும் உணவகங்களுக்கு சென்று நேரத்தை செலவிட முடியாத நிலையில் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது ஆன்லைன் உணவு டெலிவெரி மற்றும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை மட்டும் நாடுமுழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் தற்போது அமேசான் நிறுவனம் ஆன்லைன் உணவும் டெலிவெரி சேவையை தொடங்கியுள்ளது.

இது முதல்கட்டமாக பெங்களூருவில் தனது சேவையை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அமேசான் செய்தி தொடர்பாளர், வாடிக்கையாளர்களின் கருத்துக்களில் அடிப்படையில் ஆன்லைன் உணவு டெலிவெரி சேவையை பெங்களூருவில் தொடங்கியுள்ளதாகவும் ஊரடங்கால் வெளியே வரமுடியாமல் உள்ள மக்களுக்கு நல்ல சிறந்த உணவகங்களில் உள்ள தரமான உணவுகளை தற்போது வழங்கி டெலிவெரி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அமேசான் புட்சேவை பெங்களூருவில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தற்போது வழங்கிவருவதாகவும் விரைவில் சேவை விரிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது போட்டியாக அமேசானும் தனது சேவையை தொடங்கியுள்ளது.

இவ்விரு நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே