EPS – OPS முன்னிலையில் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் 6 இடங்கள் உள்பட மாநிலங்களவையில் காலியாகும் 55 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி, நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் கே.பி. முனுசாமி, தம்பி துரை மற்றும் அதிமுக கூட்டணியில் போட்டியிடு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியான சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே