மத்திய அரசு வேளாண் மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றியது.

ஆனால் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மைக் உடைத்து , விதி புத்தகம் கிழித்து எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், மாநிலங்களவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், மீண்டும் அவை கூடிய நிலையில், அப்போதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அமளிக்கு மத்தியில் மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மாநிலங்களவையில் விவசாயிகள், வேளாண் விளைபொருட்கள் குறித்த சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

வேளாண் மசோதாக்கள் நிறைவேறிய பின்னர், மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த அத்தனை தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே