நடிகை வனிதாவின் 3வது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது!

நடிகை வனிதா தனது காதலரான பீட்டர் பாலை இன்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. சந்திரலேகா படம் மூலம் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர்.

அதன்பின் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவருக்கு நடந்த இரண்டு திருமணங்கள் தோல்வியை தழுவின.

முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

இந்நிலையில் இயக்குனர் பீட்டர் பால் என்பரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு இவர்களின் மகள்களும் ஆதரவு கொடுத்தனர்.

இதனால் மகிழ்ச்சியோடு திருமண வேலைகளை கவனித்து வந்தார்.

இவர்களது திருமணம் இன்று(ஜுன் 27) வனிதாவின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது.

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்த பீட்டர் பால், வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அம்மாவின் திருமணத்தை கண்டு மகள் கண்கலங்கினர்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் வனிதா தனது கையில் பீட்டர் பால் பெயரையும், பீட்டர் பால் தனது கையில் வனிதா பெயரையும் பச்சை குத்திக் கொண்டனர்.

மேலும் தன் அம்மாவிடம் இருந்து வைர மோதிரங்கள் திருமண பரிசாக கிடைத்துள்ளது. இதை அம்மாவின் நண்பர் பரிசளித்ததாக பகிர்ந்தார் வனிதா.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே