பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழில் பல்வேறு சீரியல்கலிள் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா.

வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, இவருக்கு சமீபத்தில் தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

தற்போது ஊரடங்கு காரணமாக இந்த திருணம் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே