அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு உதவு செய்யும் படி முன்னாள் நிர்வாகிகள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஃபெப்சி தொழிலாளர்களை போலவே நலிந்த நடிகர்களுக்கும் சினிமா நடிகர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த தகவலை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தில் உள்ள 1,500 நலிந்த கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.

இதற்காக 24 டன் மளிகை பொருட்களை சம்மந்தப்பட்ட நடிகர் சங்கத்திற்கு ரஜினிகாந்த் வழங்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே