நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 54.
2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் – நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன.
இந்தப் படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக, சசிகுமார் – அனன்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் கோபாலகிருஷ்ணன்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
கோபாலகிருஷ்ணனின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.