தமிழ், தெலுங்கு நடிகரான நடிகர் ஆதி, Let’s the Bridge என்ற அமைப்பின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சமைப்பதற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார்.
இதுகுறித்து நடிகர் ஆதி கூறியதாவது, “ஊரடங்கிற்குப் பின்னர் சினிமாத் தொழில் பெரிய அளவில் நசுக்கப்பட்டுள்ளது, அதனால் உதவி இயக்குனர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய நினைத்தேன். அதனால் உதவி இயக்குனர்களின் பட்டியலை இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து பெற்றேன்.
அதன்பின்னர் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி Let’s the Bridge என்ற அமைப்பின் உதவியுடன் கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம், போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று ஒரு மாதத்திற்கு சமையலுக்குத் தேவையான சமையல் பொருட்களை வழங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.