ஆக்ட் பைபர்நெட் திட்டங்களில் அதிரடி திருத்தம்; நீ லாக்டவுனை அனுபவி ராஜா!

ஆக்ட் பைபர்நெட் தனது பிராட்பேண்ட் திட்டங்களை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கியமான இணைய வழங்குநரான ஆக்ட் பைபர்நெட் அதன் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு திருத்தப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.
நீங்கள் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் அல்லது சென்னையில் உள்ள ஆக்ட் பைபர்நெட் பயனராக இருந்தால், இந்த புதிய திட்டங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கும்.
ஆக்ட் பைபர் அதன் பிராட்பேண்ட் திட்டங்களின் இணைய வேகத்தை மேம்படுத்தியதோடு மட்டுமின்றி, அந்த திட்டங்கள் இப்போது அதிக டேட்டா பயன்பாடு மற்றும் புதிய நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) வரம்பையும் கொண்டுள்ளன.

ஆக்ட் பிளாட்டினம் விளம்பர திட்டம் இப்போது 200Mbps வரை வேகத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் டயமண்ட் திட்டம் உங்களுக்கு 300Mbps அளவிலான வேகத்தை வழங்கும். சுவாரஸ்யமாக, நிறுவனம் இந்த திட்டங்களின் விலையை மாற்றவில்லை மற்றும் இந்த புதிய மாற்றங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன.

இந்த மாற்றங்களுக்கு பின்னர், பிளாட்டினம் திட்டம் 1,000 ஜிபி அளவிலான டேட்டா 200 எம்.பி.பி.எஸ் வேகத்திற்கு வழங்குகிறது, குறிப்பிட்ட டேட்டா தீர்ந்த பின்னர் இணைய வேகம் 1 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் 1000ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவையும் நீங்கள் பெறலாம்.
டயமண்ட் திட்டத்தைப் பொறுத்தவரை, 1,500 ஜிபி அளவிலான டேட்டாவை 300 எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் பெறுவீர்கள், கூடுதல் 1,000 ஜிபி சலுகையுடன் மொத்தம் 2,500 ஜிபி வரை நீங்கள் பெறலாம். இந்த திட்டங்களின் விலை முறையே ரூ.1,049 மற்றும் ரூ.1,349 ஆகும்.

ஆக்ட் பைபர்நெட் சேவையின் கீழ் இந்த இரண்டு திட்டங்களும் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, மீதமுள்ளவை அதே டேட்டா வேகம் மற்றும் டேட்டா பயன்பாட்டு வரம்புடன் வருகின்றன.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆக்ட் பைபர்நெட் வலைத்தளத்திற்குச் சென்று கூடுதல் விவரங்களைப் பெறலாம் அல்லது புதிய திட்டங்களுக்கு பதிவு செய்யலாம். வீட்டிலிருந்து பணிபுரியும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக நிறுவனம் தனது டேட்டா வேகத்தை திருத்தியுள்ளதாக தெரிகிறது.

ஆக்ட் பைபர்நெட் தனது பிராட்பேண்ட் திட்டங்களை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கியமான இணைய வழங்குநரான ஆக்ட் பைபர்நெட் அதன் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு திருத்தப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.
நீங்கள் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் அல்லது சென்னையில் உள்ள ஆக்ட் பைபர்நெட் பயனராக இருந்தால், இந்த புதிய திட்டங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கும்.
ஆக்ட் பைபர் அதன் பிராட்பேண்ட் திட்டங்களின் இணைய வேகத்தை மேம்படுத்தியதோடு மட்டுமின்றி, அந்த திட்டங்கள் இப்போது அதிக டேட்டா பயன்பாடு மற்றும் புதிய நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) வரம்பையும் கொண்டுள்ளன.

ஆக்ட் பிளாட்டினம் விளம்பர திட்டம் இப்போது 200Mbps வரை வேகத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் டயமண்ட் திட்டம் உங்களுக்கு 300Mbps அளவிலான வேகத்தை வழங்கும். சுவாரஸ்யமாக, நிறுவனம் இந்த திட்டங்களின் விலையை மாற்றவில்லை மற்றும் இந்த புதிய மாற்றங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன.

இந்த மாற்றங்களுக்கு பின்னர், பிளாட்டினம் திட்டம் 1,000 ஜிபி அளவிலான டேட்டா 200 எம்.பி.பி.எஸ் வேகத்திற்கு வழங்குகிறது, குறிப்பிட்ட டேட்டா தீர்ந்த பின்னர் இணைய வேகம் 1 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் 1000ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவையும் நீங்கள் பெறலாம்.
டயமண்ட் திட்டத்தைப் பொறுத்தவரை, 1,500 ஜிபி அளவிலான டேட்டாவை 300 எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் பெறுவீர்கள், கூடுதல் 1,000 ஜிபி சலுகையுடன் மொத்தம் 2,500 ஜிபி வரை நீங்கள் பெறலாம். இந்த திட்டங்களின் விலை முறையே ரூ.1,049 மற்றும் ரூ.1,349 ஆகும்.

ஆக்ட் பைபர்நெட் சேவையின் கீழ் இந்த இரண்டு திட்டங்களும் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, மீதமுள்ளவை அதே டேட்டா வேகம் மற்றும் டேட்டா பயன்பாட்டு வரம்புடன் வருகின்றன.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆக்ட் பைபர்நெட் வலைத்தளத்திற்குச் சென்று கூடுதல் விவரங்களைப் பெறலாம் அல்லது புதிய திட்டங்களுக்கு பதிவு செய்யலாம். வீட்டிலிருந்து பணிபுரியும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக நிறுவனம் தனது டேட்டா வேகத்தை திருத்தியுள்ளதாக தெரிகிறது.

அதிக அளவிலான டேட்டா பயன்பாட்டு வரம்புடன் 300Mbps என்கிற இணைய வேகத்தை வழங்குவதென்பது மக்கள் நிலையான இன்டர்நெட் கவரேஜை கவலை இல்லாமல் அனுபவிக்கலாம் என்று அர்த்தம். வீடியோ மீட்டிங்களில் கலந்துகொள்வதற்கும், வீட்டிலுள்ள பல சாதனங்கள் அதிவேக இணைய இணைப்பை ஆதரிப்பதையும் உறுதி செய்வதற்கும் இது அவசியம்.
தொற்றுநோயால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், ஸ்ட்ரீமிங் தளங்கள், கேமிங் மற்றும் பிற ஆன்லைன் செயல்பாடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே