பிரதம மந்தியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்று திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என சேலம் ஆட்சியர் ராமன் அறிவித்துள்ளர்.

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் முறைகேடாக பெற்ற பல கோடி ரூபாய் மீண்டும் திரும்ப பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்று திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். 

நாளை மாலைக்குள் பணத்தை திருப்பி செலுத்தாவிடில் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக சேலத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் செப்.14 ஆம் தேதி மாலைக்குள் பணத்தை செலுத்தி உரிய ஆவணம் பெறவேண்டும் என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே