சென்னையில் இனி வீடு தேடி வரும் ஆவின் பால்..!

சென்னையில் ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் நுகர்வோரின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், zomato, Dunzo நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, வெள்ளிக்கிழமை முதலே வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நிலவி வரும் நிலையில், சென்னை மாநகர பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி எந்த சிரமமும் இல்லாமல் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகவே, பொது மக்கள், நுகர்வோர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே