முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சீராலா நகரை சேர்ந்தவர் கிரண் குமார்.

கடந்த 19 ம் தேதி முகக் கவசம் அணியாமல் வீதியில் நடமாடிய கிரண் குமாரை தடுத்து நிறுத்திய சீராலா காவல் நிலைய போலீஸ் எஸ்.ஐ விஜயகுமார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயம் அடைந்த கிரண் குமாரை உறவினர்கள் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து சென்று குண்டூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு கிரண்குமார் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

கிரண்குமாரை தாக்கி அவருடைய மரணத்திற்கு காரணமான போலீஸ் எஸ்ஐ விஜயகுமார் மீது வன் கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மரணமடைந்த கிரண்குமார் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே