தங்கத்தின் விலை ஒரு சவரன் 38ஆயிரத்தை கடந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.38,000 தாண்டியுள்ளது.

கொரோனா பரவல் நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக வளாகங்களும் பெரும்பாலும் மூடியே உள்ளன.

சில தளர்வுகளுன் அனுமதிக்கப்பட்டு, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தனியே அமைந்துள்ள நகைக்கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனா கால ஊரடங்கிலும் தங்கத்தின் மதிப்பு குறைந்தபாடில்லை. 

தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை, சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.544 ஆக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280க்கு விற்பனையாகிறது.

அதேபோல, வெள்ளி இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.68 உயர்ந்து, ரூ.4,785-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.60,100 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.65,700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே