புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியிலும் கொரோனாவின் தீவிரம் குறையவில்லை என்பதால் அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்பபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா பாதித்தவர் இறப்பு விகிதத்தை குறைக்கும் நடவடிக்கையாக, கட்டாயம் 10 நாட்கள் மருத்துவமனையில் கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது என்றார்.
மேலும், மக்களுக்கு நோய் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை இதனாலேயே தொற்று அதிகரிப்பதாகவும், இது வேதனை அளிக்கிறது என்றும் கூறினார்.
கொரோனா தொற்றை குறைக்க நாளை முதல் இனி ஒவ்வொரு செய்வாய்கிழமைகளிலும் 24 மணி நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் இது ஞாயிற்றுக்கிழமையன்றும் மாற்றப்படும் என்றார்.
மேலும் மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.