ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று நேருவின் 131-வதுபிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, புதுடெல்லியில் சாந்தி வானாவில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்துக்கு இன்று காலை சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் ராகுல் காந்தி ட்விட்டரில் ப திவிட்ட கருத்தில் ‘ இன்று , தேசத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை இந்தியா கொண்டாடுகிறது.
சகோதரத்துவம், சமத்தும், நவீன சிந்தனை ஆகியவற்றால் தேசத்துக்கு தொலைநோக்குடன் அடித்தளமிட்டவர். இந்த மதிப்பு மிகுந்த விஷயங்களை கண்டிப்பாக பாதுகாப்பதே எங்களின் முயற்சியாகும்’ எனத் தெரிவித்தார்.
நேருவின் 131-வது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘ தேசத்தின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று எனது பணியான மரியாதையை செலுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.