திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பற்றியும் எரியும் காட்டுத்தீயில் அரிய வகை மூலிகை மரங்கள் கருகி நாசமாகியுள்ளது.
கொடைக்கானல் அருகே உள்ள கோவில்பட்டி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது.
தனியார் வருவாய் நிலத்தில் பற்றிய தீயானது அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவியுள்ளது.
இந்த காட்டுத்தீயினால் அரியவகை மூலிகை மரங்களும், வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததனர்.
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பூகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், தீயை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட வனத்துறையினரோ,
தீயணைப்பு அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொது மக்கள் குற்றம்சட்டுகின்றனர்.
பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த கோவில்பட்டி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.