ஏன் ஈரோடு மாவட்டத்தை முடக்க வேண்டும்? விஜயபாஸ்கர் விளக்கம்!

ஈரோடு மாவட்டத்தை முடக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்தது ஏன் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸகர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை முடக்கி வெளியான செய்திக்கு பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பினர்.

அதற்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் வெளிநாடுகளிலில் இருந்து வந்தவர்களே என்றும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாடு சென்று திரும்பியவர்கள், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே