மும்பையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.
இதையடுத்து இரு அணிகள் இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பகலிரவாக நடைபெறுகிறது.
2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் அந்த அணி வசமாகி விடும்.
ஆதலால் இப்போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.
அதேநேரத்தில் 2ஆவது போட்டியில் வென்று, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடும் திட்டத்துடன் இந்திய அணி களம்புகுந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் பந்த், 2ஆவது போட்டியில் சேர்க்கப்படவில்லை.
அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் அறிவிக்கப்பட்டிருந்தார்.