தமிழகத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு, புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பதவி காலமும் மேலும் 6 மாதம் நீட்டிப்புக்கப்பட்டுள்ளது.
தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கே.என் நேரு, கே.ஆர் பெரியகருப்பன் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தனர்.
ஜூன் 30-ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.