சேலம் : சாத்தான்குளம் போல் மேலும் ஒரு சம்பவம்..!! போலீஸ் அராஜகம்..!! ( வீடியோ )

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஆத்தூர்- இடையப்பட்டி சோதனைச் சாவடியில் வெள்ளையன் என்ற முருகேசன் மது போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் அவர் மயங்கிய நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு தலையில் அடிப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே