இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,15,074 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62,064 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,386 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் 54,859 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 15,35,743 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் தற்போது வரை கொரோனாவால் பாதித்த 6,34,945 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.