ஒரே குடும்பத்தின் 5 பேர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பேட்டரஹள்ளியில் 9 மாத குழந்தையை கொலை செய்து, 3 பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசரித்து வருகின்றனர்.

திலகர பாளையா பகுதியில் ஒரு வீட்டிற்குள் துர்நாற்றம் வீசுவதாக அறிந்து சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த 4 பேரின் உடல் மற்றும் 9 மாத குழந்தையின் சடலத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டினுள் 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத் தகராறு காரணமாக சம்பவம் நடந்ததா என விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே