விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 424 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் விருதுநகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,267 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 348 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டது.
இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 8,843 ஆக அதிகரித்திருந்தது. மேலும் கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 6336 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனாவுக்கு 105 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2402-ல் இருந்து 2,826 ஆக அதிகரித்துள்ளது.