தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18லட்சத்து 64ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒரு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தமிழகத்தில் நேற்று 1075பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், “தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 58 பேர் குணமடைந்துள்ளனர்.

10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசால் 25 புதிய பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

புதிதாக மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே