ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்ற 30 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 180 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கொரோனாவை பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்த பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான பரிசோதனை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து, சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் குணமடைந்துள்ளனர்.

ஓமந்தூரர் மருத்துவமனையில் 28 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் மேலும் 70 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே