பொதுமுடக்க காலத்தில் விதிகளை மீறினால் 14 நாட்கள் தனிமை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னையில் விதியை மீறி நடந்தால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அவர், தனி மனித இடைவெளி இருநபர்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினமும் அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போது வரை 906 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் இந்த கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விதியை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது;

* சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

* விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், பஸ் தங்குமிடங்கள், ஆட்டோ நிலையங்கள் மற்றும் பொது அரங்குகள் ஆகிய இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

* ஷாப்பிங் மால்கள், பொது பூங்காக்கள், தீம் பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், திருமண அரங்குகள், வங்கிகள், ஏடிஎம்கள், நிதி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகள், மருத்துவ கடைகள், பி.டி.எஸ் கடைகள், பால் சாவடிகள், பேக்கரிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் பிற கடைகள், சந்தை இடங்களில் அரிசி கடைகள், காய்கறி கடைகள் மற்றும் பழ கடைகள், சிக்கன் கடைகள் , மட்டன் கடைகள், மீன் கடைகள் மற்றும் அசைவ விற்பனையான பிற கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள், ஹோட்டல், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

* வேலை செய்யும் இடத்தில் கை கழுவும் வசதி மற்றும் சானிடைஸர் வசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தப்பட்டபடி சுத்திகரிக்கப்பட வேண்டும் மற்றும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து நிறுவனங்களும் அடிக்கடி கை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

* விதிகளை மீறிய கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.

* ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 1% ஹைபோகுளோரைட் கரைசலையும், 2.5% லைசோலையும் கலந்து கிருமிநீக்கம் செய்யவேண்டும்.

* 2 நபர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தின் சமூக தூரம் இருக்க வேண்டும்.

* வேலை செய்யும் மற்றும் வளாகத்திற்கு வருகை தரும் அனைத்து நபர்களும் கட்டாயமாக மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.

* கட்டாயமாக நுழைவாயிலில் சானிடைஸர் வசதி வைக்க வேண்டும்.

மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு கை சானிடைஸர் பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே