இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி வாகனத்தில் ஏறுவதற்காக சாலையை கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு மாணவர் மீது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதியதில் மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை சிறிது தூரத்தில் சிறைபிடித்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.