கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டார கடலோர பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுவதால் குளச்சல், முட்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. காலையில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு சில மீனவர்களும் கடல் சீற்றத்தால் பாதியிலேயே கரை திரும்பி உள்ளன.ர் இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரம் வள்ளம் மற்றும் விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே