ஆமாம், நான் பீட்டர் பாலை பூட்டித் தான் வச்சிருக்கேன்: உண்மையை போட்டுடைத்த வனிதா.

ஆமாம், பீட்டர் பாலை பூட்டித் தான் வைத்திருக்கிறேன் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்ததில் இருந்து அவர்களை பற்றி தான் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்றும், அவர் ஒரு பொம்பள பொறுக்கி என்று ஹெலன் தெரிவித்தார். வனிதாவின் திருமணம் குறித்து சூர்யா தேவி என்பவரும், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும் விமர்சித்தார்கள். இதையடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வனிதா சென்னை துணை கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார்.

திருமணம் முடிந்ததில் இருந்து பீட்டர் பால் பேசவே இல்லை, லிப் டூ லிப் முத்தம் கொடுக்க மட்டும் தான் கேமராவுக்கு முன்பு வருகிறார் என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் வனிதா தன் யூடியூப் சேனலில் பீட்டர் பாலை பேட்டி எடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் வனிதாவும், பீட்டர் பாலும் கூறியதாவது,

படத்திற்கு கதை கேட்கத் தான் நானும், பிள்ளைகளும் உங்களை பார்க்க வந்தோம். அடுத்து ஸ்க்ரிப்ட் படிக்க வருவோம் என்று நினைத்தோம். ஆனால் உங்களை இப்படி பேட்டி எடுக்கும் நிலை வரும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை. மக்கள் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டார்கள்.
கொரோனா வைரஸ், சாத்தான்குளம் விஷயத்தை எல்லாம் மறந்துவிட்டு வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஹேஷ்டேக் தான் டிரெண்டிங்காக இருக்கிறது. சமூக வலைதளத்தில் பெரிய பிரச்சனையே நடக்கும்போது எதுக்குமே சம்பந்தம் இல்லாதது மாதிரி நீங்கள் பாட்டுக்கு ஜாலியாக உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று வனிதா கூற நான் யாருக்கு பதில் சொல்லணும் என்று பீட்டர் பால் கேட்டார்.
பீட்டர் பால் எங்கே, அவரை பேசச் சொல்லுங்க என்கிறார்கள். உங்கள் மனைவி நான் உங்களை பூட்டி வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார் என்றார் வனிதா. அதற்கு பீட்டர் பாலோ, பூட்டி தான வச்சிருக்க, உன்னுடைய இதயத்தில் பூட்டி தான வச்சிருக்க, அது தான் உண்மை என்றார். அந்த பூட்டினதை தான் சொல்கிறார்களா?. அதற்கு தான் பூட்டு, சாவியுடன் கூடிய மோதிரங்களை வாங்கினோம். அப்படி என்றால் நான் அவரை பூட்டித் தான் வைத்திருக்கிறேன் என்றார் வனிதா.

நீ தான் பூட்டி வச்சிருக்க, இந்த மாதிரி பூட்டி வச்சிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்றார் பீட்டர்.

நீங்க ஆம்பளயா என்று தகாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி உங்களை விமர்சிக்கிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா என்று வனிதா கேட்க கண்டிப்பாக என்று கூறி அவர் கையை பிடித்தார் பீட்டர் பால். உடனே வனிதாவோ, அய்யய்யோ குழந்தைகள் எல்லாம் பார்க்கிறார்கள் கையை பிடிக்கிறீர்களே என்று கலாய்த்தார்.
முன்னதாக யூடியூப் லைவில் வந்தபோது வனிதா பீட்டர் பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். அதை பார்த்தவர்கள் குழந்தைகள் எல்லாம் பார்க்கும்போது இப்படி செய்யலாமா என்று விளாசினார்கள். அதை தான் தற்போது கிண்டல் செய்திருக்கிறார் வனிதா.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே