இந்திய வானிலை மையத்திற்கு உலக வானிலை ஆய்வு நிறுவனம் பாராட்டு!

இந்தியாவில் மிக சமீபத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய Amphan புயல் குறித்து துல்லியமாக கணித்ததாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் பாராட்டியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக உரு மாறியது.

Amphan என பெயரிடப்பட்ட அந்த புயல் சூப்பர் புயலாக மாறும் என்றும், மேற்கு வங்கம் மற்றும் வங்காள விரிகுடா இடையே கரையை கடக்கும் என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்தது.

அதன் பேரில் மேற்கு வங்கத்தில் பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படியே குறிப்பிட்ட நேரத்தில் Amphan மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. 

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி செயல்பட்டதால் உயிர்சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டது.

Amphan புயல் குறித்து மிக துல்லியமாக கணித்து செயல்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தை உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே