தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா பாஜக ?? – கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகள் வழியாக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தடைகோரி வருகின்றன.

இதனிடையே பாஜகவினர் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் கடிதம் கொடுத்து வரும் நிலையில் இன்னும் உறுதியான முடிவு எதுவும் போலீஸ் தரப்பில் எடுக்கப்படவில்லை.

பாஜகவின் வேல் யாத்திரையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

இதனால் காவல்துறையினர் வேறு வழியின்றி வேல் யாத்திரைக்கு பாதுகாப்பும் அனுமதியும் கொடுத்தாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை என கூறி பாஜகவின் வேல் யாத்திரிகைக்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த செந்தில் குமார், பாலமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இத்தகைய தருணத்தில், திமுக எம்.பி.கனிமொழி பதவிட்டுள்ள டீவீட்டில், ‘தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?,’ என்று வினவியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே