செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு..!!

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாலை 6 மணிக்கு மேல் 5000 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது.

தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு நீர் திறப்பு மாலை 6 மணிக்கு 5000 கனஅடியாக அதிகப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றும் நீரின் விகிதமும் அதிகரிக்கிறது.

மேலும், கரையோரம் வசிக்கும் மக்களை அந்தந்த நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் இப்போது 30 அடி நீர் நிரம்பி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 35 அடியில் இருந்து 30 கண்ணாடி என்பது தெரிந்துவிட்டது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே