தெலுங்கானாவில் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரகதி பவனில் கொரோனா பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதில் கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாநில போலீசார் , நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சந்திரசேகர ராவ், மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே