வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் க.வைத்தி பாமகவிலிருந்து விலகல்..!!

மாநில வன்னியர் சங்க செயலாளர் பொறுப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார்.

பாமக வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியாகி உள்ளது.

இதில் வாய்ப்பு கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தவர் மாநில வன்னியர் சங்க செயலாளரும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியுமான வைத்தி.

ஆனால் அவருக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை.

இந்த நிலையில், மாநில வன்னியர் சங்க செயலாளர் பொறுப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், உழைப்புக்கு மதிப்பில்லா, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

வைத்தி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார்.

ஆனால் அங்கு பாமக வேட்பளாக பாலு அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வைத்தி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே