கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய வாழ்த்துவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தகவலை சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட அமித் ஷா, உடல்நிலை சீராக உள்ளபோதிலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், “அமித் ஷா விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, அமித் ஷா விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.