#U19WorldCup : வங்கதேசத்திற்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா..!!

வங்கதேசத்துக்கு எதிரான 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும், வங்கதே அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் சார்பில் தொடக்க வீரராக, யாஸ்ஸாஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஸ் சக்ஷேனா களமிறங்கினர். சக்ஷேனா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய திலக் வர்மா நிதானமாக ஆடி 38 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

ஜெய்ஸ்வால் மட்டும் நிதானமாக ஆடி 88 ரன்களைக் குவித்தார். ஆட்ட நேர இறுதியில் 47.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 177 ரன்கள் மட்டுமே குவித்தது.

வங்கதேசம் சார்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே