மத்திய பட்ஜெட் பற்றி டிடிவி தினகரன் ட்வீட்..!!

கொஞ்சம் மகிழ்ச்சி, நிறைய கவலைகளைத் தரும் கலவையாக பட்ஜெட் அமைந்துள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

2021-22 பட்ஜெட் தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தமிழகத்திற்கான திட்டங்கள் மகிழ்ச்சி அளித்தாலும், எய்ம்ஸ் போல ஆகிவிடாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

வேளாண்மை, வேலைவாய்ப்பை அதிகப்படுத்த போதுமான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

சென்னை சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை இவ்வளவு எதிர்ப்புக்கு பிறகும் இந்த ஆண்டே நிறைவேற்றியே தீருவோம் என்று அறிவித்திருப்பது சரியானதல்ல.

மின்பகிர்மானத்தை தனியாருக்கு திறந்துவிடுவது, லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சியின் பங்குகளை விற்பது ஆபத்தானது.

சிறுகுறு தொழில்கள், வேளாண்மை தொடர்பான திட்டங்கள் போதுமானதாக இல்லை’ என தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே