சீனா செய்த படுகொலைகள் – டிரம்ப் குற்றச்சாட்டு

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரப்பியதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆயிரமாகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது அமைச்சர்களுடன் கொரோனாவை எதிர்ப்பது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். சீனா மீது தமது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் டிரம்ப் மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் மெத்தனத்தால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக டிரம்ப் ஆவேசத்துடன் சாடினார்.

Related Tags :

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே